Friday, October 22, 2010

கடன் கொடுப்பாயா


அன்பே!!!
உன்னை கண்டதும்
மதி இழந்தேன்.....
நிலவே
உன்னை பார்த்ததும்
சொல்லிழந்தேன்.
வரம் கொடுப்பாயா
உன் காதலை ....?
கடன் கொடுப்பாயா
உன் இதயத்தை.....?

வெற்றி பெற


வெற்றியால்
மகிழ்ச்சி மட்டும் தன் கிடைக்கும் - ஆனால்
தோல்வியால் நல்ல அனுபவம், அதனால்
பக்குவம் கிடைக்கும்.
அனுபவம் தான்
வாழ்க்கையில்
வெற்றி பெற உதவும்.

Tuesday, July 13, 2010

ஒரு பொண்ணு

ஒரு பொண்ணு அழகாக தெரிவதால்
அவளை நீ நேசிக்கவில்லை.
நீ நேசிப்பதால் தான் அவள்
அழகாக தெரிகிறாள்.

Sunday, May 16, 2010

உன்னை நினைத்து


ஒரு நிமிடம் கூட
இடைவெளி இல்லாமல் உன்னை நினைத்து
கொண்டிருக்கிறேன்.....
ஒரு
நொடியாவது நீ
என்னை நினைப்பாய்
என்று

Tuesday, May 4, 2010

கல்யாண வீட்டில்

கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய ஒரு கவிதை:
உள்ளே ஒரு ஜோடி சேர்ந்து விட்டது,
வெளியே ஒரு ஜோடி தொலைந்து விட்டது..............

5 பேப்பர் கொடுங்க

சர்தார்:ஒயிட் பேப்பர் 5 கொடுங்க.
கடை காரர்: 1 தான் இருக்கு....!
சர்தார்: பரவாயில்ல கொடுங்க நான்  Xerox எடுத்துக்குறேன்.
கடைகாரர்: .......??

Thursday, April 8, 2010

காத்திருக்கிறேன்


உன் கல்லூரி வாசலில்
ஒரு மரமாக காத்திருக்கிறேன்.
தினம் ஒரு முறையாவது
என் மீது
சாய்ந்து விட்டு போ
என் அன்பு
உன் மீது
பூக்களாக விழும்....

கோபம் & அன்பு


உன் கோபம் உன்னை
நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...........
ஆனால்
உன் அன்பு உன்னை
வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்.............

புரியும்


ரோஜாவை மட்டும்
ரசித்தால் போதாது,
அதில் இருக்கும்
முட்களையும்
ரசித்து பார்........
வாழ்க்கையின் அர்த்தம்
புரியும்............

நட்பு


உங்களை சந்திக்காமல்
இருக்க முடியும். - ஆனால்
உங்களை சிந்திக்காமல்
இருக்க முடியாது
இது தான் என் நட்பு

Tuesday, March 30, 2010

நட்பை உணர்ந்தேன்

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில் தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை.

Monday, March 29, 2010

பாசம் அதிகம்.


நான் நேசிப்பது
பூவையும், உன் மனசையும் தான்.
ஏனென்றால்,
பூவுக்கு வாசம் அதிகம்.
உன் மனசுக்கு பாசம் அதிகம்.

Sunday, March 28, 2010

எறும்பு ஏறுது சார்

மாணவன் : சார் என் தலையில எறும்பு ஏறுது சார்.


ஆசிரியர் : அத ஏண்டா நீ என் கிட்ட சொல்லுறா?

மணவன் : நீங்க தானே சார் சொன்னீங்க என் தலையில ஒன்னுமே ஏறாதுன்னு.

ஆசிரியர் : ? ? ?

Thursday, March 25, 2010

அமைதியாய் நின்றேன்


கடற்கரை மணலில் உன் 
பெயரை எழுதி வைத்தேன்,
அலை வந்து அடித்து சென்றது,
அமைதியாய் நின்றேன்.
உன் பெயராவது
குளிக்கட்டும் என்று.

ஒரு நிமிட புன்னகை


நீ பேசும் போது என்னை
மறக்க வைத்த உன்
வார்த்தைகளை விட,
நீ பேசாமல் சிரித்த
ஒரு நிமிட புன்னகை
என்னை
இந்த உலகத்தையே
மறக்க வைத்து விட்டது.

ஆயுள் வரை சந்தோசம்


அழகான உறவுகள் "ஒரு நிமிட
சந்தோசத்தை தான் தரும்" - ஆனால்
அன்பான உள்ளங்கள்
"ஆயுள் வரை சந்தோசத்தை தரும்"

நீ கலங்கி விட கூடாது .........




காற்று அடிக்கும் போது கூட
கண்களை மூடி
கொள்கிறேன்.
என் கண்ணுக்குள்
இருக்கும் நீ
கலங்கி விட கூடாது என்று.

நீ மட்டும் எனக்கு போதும்.


மீண்டும் ஒரு ஜென்மம் இருப்பது நிஜமானால்
நீ மட்டும் எனக்கு போதும்.
உறவாக அல்ல,
உயிரையே தரும் நட்பாக.

கேட்டுகிட்டே இருங்க


மனிதன் 1 :சூரியன் FM ல வேலைக்கு போனது தப்பா போச்சு.
மனிதன் 2 : ஏன்டா என்ன ஆச்சு.
மனிதன் 1 :சம்பளம் கேட்டா, கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்க என்று சொல்றாங்க.

Saturday, March 20, 2010

வேண்டும்.

என் ஆயுள் முழுவதும் உன் அன்பு வேண்டும்.
இல்லை என்றால்,
உன் அன்பு உள்ள வரை எனக்கு ஆயுள் வேண்டும்.

நம்பிக்கை



வலிகின்ற இதயமும்,
வடிகின்ற கண்ணீரும்
நிச்சயம்
ஒரு நாள் மாறும்.
உண்மையான
அன்பும்,
உறுதியான
நம்பிக்கையும்
இருந்தால்.

Friday, March 19, 2010

யாருக்கு தெரியும்...



உதடுகள் சிரிப்பது
ஊருக்கு தெரியும். - ஆனால்
உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும்...
உண்மையாக
நேசிப்பவர்களை தவிர.........

மனதில் பதிந்த காவியம்.,......

மறப்பதற்க்கு
நீ ஒன்றும் மணலில் வரைந்த
ஓவியம் அல்ல......
மனதில் பதிந்த
காவியம்.........

புரியும்......


நிலவை பார் !
கடவுளின் ரசணை
புரியும்....
சூரியனை பார் !
கடவுளின் சக்தி
புரியும்....
கண்ணாடி பார் !
கடவுளின் காமெடி
புரியும்....

Thursday, March 18, 2010

அத்தனையும் நீ



என் நந்தவனத்தில்
எத்தனையோ மலர் செடிகள்
என்னவோ தெரியவில்லை.
அத்தனையும்
நீயாகவே இருக்கிறாய்.
Welcome to My HOME