Thursday, April 8, 2010
காத்திருக்கிறேன்
உன் கல்லூரி வாசலில்
ஒரு மரமாக காத்திருக்கிறேன்.
தினம் ஒரு முறையாவது
என் மீது
சாய்ந்து விட்டு போ
என் அன்பு
உன் மீது
பூக்களாக விழும்....
கோபம் & அன்பு
உன் கோபம் உன்னை
நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...........
ஆனால்
உன் அன்பு உன்னை
வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்.............
புரியும்
ரோஜாவை மட்டும்
ரசித்தால் போதாது,
அதில் இருக்கும்
முட்களையும்
ரசித்து பார்........
வாழ்க்கையின் அர்த்தம்
புரியும்............
நட்பு
உங்களை சந்திக்காமல்
இருக்க முடியும். - ஆனால்
உங்களை சிந்திக்காமல்
இருக்க முடியாது
இது தான் என் நட்பு
Subscribe to:
Posts (Atom)