Friday, January 28, 2011

அழியா இடம் பிடிக்க


சூரியனில் இடம் பிடிக்க தயக்கமில்லை!
அந்த சூடுகளை கூட தாங்கி விடுவேன்.
ஆனால் உன் மனதில் அழியா இடம் பிடிக்க
என் மனதினை மெழுகாய் அல்லவா உருக்கினேன்.

திடீர் கூட்டணி


தினம் தினம்
திடீர் கூட்டணி
தலைமுடியில் சவுரி

Tuesday, January 25, 2011

கடல்நீர்


எத்தனை மீன்கள்
அழுதனவோ?
இத்தனை உப்பு... கடல்நீர்.

Tuesday, January 18, 2011

வினோதம்!


காதலித்துப் பாருங்கள்....
வராத கூந்தலையும்
வர்ணித்து மகிழ்வீர்கள்!

காதலித்து பாருங்கள்
கழுவாத முகத்தையும்
நிலவோடு ஒப்பிடுவீர்கள்!

காதலித்து பாருங்கள்....
காணாத கனவுகளையும்,
கண்டதாய் சொல்வீர்கள்!

காதலித்து பாருங்கள்...
காற்றையும் சிறைப்பிடித்து
தென்றலை விடுவிப்பீர்கள்!

ஏக்கம்


ஒவ்வொரு நாளும் உன் விரல் படாத
ஏக்கத்தில் வாடுகின்றன
தோட்டத்து ரோஜாக்கள்!
இன்றாவது
உன் விரல்களால் கிள்ளி
கூந்தலில் அள்ளி
சூடிக்கொள்ள மாட்டாயா?

அடடே..............


முட்கள் இருந்தும்
கவலையில்லாத பயணம்!
கடிகாரம்!   

என்னுள்(நீ)......


நீ....
என்னிடம்
எதை வேண்டுமானாலும்
கேள்....
என்னுள்ளிருக்கும்
உன்னை தவிர

உன்னைப் போலவே


விலகுகையில் நெருங்கும்
நெருங்குகையில் விலகும்
உன்னைப் போலவே
மனதில் உதிக்கும்
என் கவிதை வரிகளும்!

அடடே..................


அன்பே
நான் பேசும் செல்போனுக்கு
நீண்ட ஆயுள்!
நீ எனக்காக தரும்
முத்தங்களை எல்லாம்
அது சேமிக்கிறதே!

Saturday, January 15, 2011

கிரிக்கெட்


வீரர்களுக்கு " சாதனை"
பந்துகளுக்கு "வேதனை"
பார்ப்பவர்களுக்கு "சோதனை"

கனவு


இமை கதவுகளை
சாத்தி விட்டேன்
எப்படி வந்தார்கள் இந்த
திருட்டு நண்பர்கள்.

என்னவளே .....


பொன் நகையை நீ கொண்டு
வர வேண்டாம்
புன்னாகையை கொண்டு
வந்தால் போதும்.

பணம் கோடி நீ கொண்டு வர வேண்டாம்
பண்பாடு நிறைய கொண்டு
வந்தால் போதும்.

வலம் வர வாகனங்கள் நீ கொண்டு
வர வேண்டாம்
வாழ்க்கை பாதையில் நாம் நடக்க
நல் வழிகளை கொண்டு
வந்தால் போதும்.

அழகு தேவதைஎன
நீ நடந்து வர வேண்டாம்
வருத்தத்தில் ஆறுதல் தரும்
இனியவளாய் வந்தால் போதும்..

காதலுக்கு மரியாதை


நடந்து சென்றேன்
பார்க்காமல் போனாள்.
சைக்கிளில் சென்றேன்
ஹாய் என்றாள்.
பைக்கில் சென்றேன்
அன்பே என்றாள்.
காரில் சென்றேன்
அத்தான் என்றாள்.
இவை அத்தனையும்
வாடகைக்கு என்றேன்
போடா என்றாள்.

மக்கட்தொகை


ஓடி விளையாடு பாப்பா!
இன்றே ஓடி விளையாடு!
நாளை
நகர கூட இடம் இருக்காது!
ஆதலால்
இன்றே! இப்போதே!
நடந்தாவது விளையாடு!

Friday, January 14, 2011

நம்பிக்கை வேர்கள்



நம்பிக்கை
நார்
மட்டும்
போதும்
உதிர்ந்த
பூக்கள்
ஒவ்வொன்றாய்
வந்து
ஒட்டி கொள்ளும்.

நிழலாய் வருவானா ?


நான் கருவில் இருக்கையில்
என் கனவில் வந்தவன்

நான் உலகில் பிறக்கையில்
என் உணர்வுடன் பிறந்தவன்

நான் சிரித்து வளர்கையில்
என் சிந்தையில் சிரித்தவன்

நான் கனவு காண்கையில்
என்னுடன் வாழ்ந்தவன்

என் நிஜ வாழ்வில்
நிழலாய் வருவானா ?

Sunday, January 9, 2011

வேண்டும் நீ


நினைவுகள் நீங்கிய போதும்
நிழலாய் என்னில்......

கவிதைகள் கலைந்த நிலையிலும்
கனவாய் என்னுள்....

சூலால்கள் மாறினும் சுழலும்
காற்றாய் என்னில்...

கருமணிகள் அயர்ந்த போதும்
கண்ணீராய் என்னில்...

கவலைகள் மறந்த நிலையில்
புண் சிரிப்பாய்  என்னுள்.....

சிட்டாய் நான் சிறகடிக்க
சிறகாய் என்னுள்...

என் மௌனங்கள் வடிவம் பெற
வார்த்தையாய் அணைக்கு...

என் வாழ்க்கை படகில்
படகோட்டியாய்  எனக்கு....
வேண்டும் நீ ................

இளைஞனின் இதய குரல்



அறிவு இல்லை என்பதால்
அன்பு இல்லை என்று நினைத்தாயடி

அழகு இல்லை என்பதால்
என்னை அடியோடு வெறுத்தாயடி

அற்ப்புத விளக்காய் நான் இருப்பேன்

நான் உன் புடவைக்கு விலை கேட்டு வரவில்லையடி
உன் புன்னகைக்கு விலை கேட்டு வந்தேன்.