Friday, January 28, 2011
அழியா இடம் பிடிக்க
சூரியனில் இடம் பிடிக்க தயக்கமில்லை!
அந்த சூடுகளை கூட தாங்கி விடுவேன்.
ஆனால் உன் மனதில் அழியா இடம் பிடிக்க
என் மனதினை மெழுகாய் அல்லவா உருக்கினேன்.
Tuesday, January 25, 2011
Tuesday, January 18, 2011
வினோதம்!
காதலித்துப் பாருங்கள்....
வராத கூந்தலையும்
வர்ணித்து மகிழ்வீர்கள்!
காதலித்து பாருங்கள்
கழுவாத முகத்தையும்
நிலவோடு ஒப்பிடுவீர்கள்!
காதலித்து பாருங்கள்....
காணாத கனவுகளையும்,
கண்டதாய் சொல்வீர்கள்!
காதலித்து பாருங்கள்...
காற்றையும் சிறைப்பிடித்து
தென்றலை விடுவிப்பீர்கள்!
ஏக்கம்
ஒவ்வொரு நாளும் உன் விரல் படாத
ஏக்கத்தில் வாடுகின்றன
தோட்டத்து ரோஜாக்கள்!
இன்றாவது
உன் விரல்களால் கிள்ளி
கூந்தலில் அள்ளி
சூடிக்கொள்ள மாட்டாயா?
Saturday, January 15, 2011
என்னவளே .....
பொன் நகையை நீ கொண்டு
வர வேண்டாம்
புன்னாகையை கொண்டு
வந்தால் போதும்.
பணம் கோடி நீ கொண்டு வர வேண்டாம்
பண்பாடு நிறைய கொண்டு
வந்தால் போதும்.
வலம் வர வாகனங்கள் நீ கொண்டு
வர வேண்டாம்
வாழ்க்கை பாதையில் நாம் நடக்க
நல் வழிகளை கொண்டு
வந்தால் போதும்.
அழகு தேவதைஎன
நீ நடந்து வர வேண்டாம்
வருத்தத்தில் ஆறுதல் தரும்
இனியவளாய் வந்தால் போதும்..
காதலுக்கு மரியாதை
நடந்து சென்றேன்
பார்க்காமல் போனாள்.
சைக்கிளில் சென்றேன்
ஹாய் என்றாள்.
பைக்கில் சென்றேன்
அன்பே என்றாள்.
காரில் சென்றேன்
அத்தான் என்றாள்.
இவை அத்தனையும்
வாடகைக்கு என்றேன்
போடா என்றாள்.
மக்கட்தொகை
ஓடி விளையாடு பாப்பா!
இன்றே ஓடி விளையாடு!
நாளை
நகர கூட இடம் இருக்காது!
ஆதலால்
இன்றே! இப்போதே!
நடந்தாவது விளையாடு!
Friday, January 14, 2011
நிழலாய் வருவானா ?
நான் கருவில் இருக்கையில்
என் கனவில் வந்தவன்
நான் உலகில் பிறக்கையில்
என் உணர்வுடன் பிறந்தவன்
நான் சிரித்து வளர்கையில்
என் சிந்தையில் சிரித்தவன்
நான் கனவு காண்கையில்
என்னுடன் வாழ்ந்தவன்
என் நிஜ வாழ்வில்
நிழலாய் வருவானா ?
Sunday, January 9, 2011
வேண்டும் நீ
நினைவுகள் நீங்கிய போதும்
நிழலாய் என்னில்......
கவிதைகள் கலைந்த நிலையிலும்
கனவாய் என்னுள்....
சூலால்கள் மாறினும் சுழலும்
காற்றாய் என்னில்...
கருமணிகள் அயர்ந்த போதும்
கண்ணீராய் என்னில்...
கவலைகள் மறந்த நிலையில்
புண் சிரிப்பாய் என்னுள்.....
சிட்டாய் நான் சிறகடிக்க
சிறகாய் என்னுள்...
என் மௌனங்கள் வடிவம் பெற
வார்த்தையாய் அணைக்கு...
என் வாழ்க்கை படகில்
படகோட்டியாய் எனக்கு....
வேண்டும் நீ ................
இளைஞனின் இதய குரல்
அறிவு இல்லை என்பதால்
அன்பு இல்லை என்று நினைத்தாயடி
அழகு இல்லை என்பதால்
என்னை அடியோடு வெறுத்தாயடி
அற்ப்புத விளக்காய் நான் இருப்பேன்
நான் உன் புடவைக்கு விலை கேட்டு வரவில்லையடி
உன் புன்னகைக்கு விலை கேட்டு வந்தேன்.
Subscribe to:
Posts (Atom)