Sunday, January 9, 2011

வேண்டும் நீ


நினைவுகள் நீங்கிய போதும்
நிழலாய் என்னில்......

கவிதைகள் கலைந்த நிலையிலும்
கனவாய் என்னுள்....

சூலால்கள் மாறினும் சுழலும்
காற்றாய் என்னில்...

கருமணிகள் அயர்ந்த போதும்
கண்ணீராய் என்னில்...

கவலைகள் மறந்த நிலையில்
புண் சிரிப்பாய்  என்னுள்.....

சிட்டாய் நான் சிறகடிக்க
சிறகாய் என்னுள்...

என் மௌனங்கள் வடிவம் பெற
வார்த்தையாய் அணைக்கு...

என் வாழ்க்கை படகில்
படகோட்டியாய்  எனக்கு....
வேண்டும் நீ ................

1 comment:

  1. அழகு அழகு கவிதை அழகு...அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete