பொன் நகையை நீ கொண்டு
வர வேண்டாம்
புன்னாகையை கொண்டு
வந்தால் போதும்.
பணம் கோடி நீ கொண்டு வர வேண்டாம்
பண்பாடு நிறைய கொண்டு
வந்தால் போதும்.
வலம் வர வாகனங்கள் நீ கொண்டு
வர வேண்டாம்
வாழ்க்கை பாதையில் நாம் நடக்க
நல் வழிகளை கொண்டு
வந்தால் போதும்.
அழகு தேவதைஎன
நீ நடந்து வர வேண்டாம்
வருத்தத்தில் ஆறுதல் தரும்
இனியவளாய் வந்தால் போதும்..
No comments:
Post a Comment