Saturday, January 15, 2011

என்னவளே .....


பொன் நகையை நீ கொண்டு
வர வேண்டாம்
புன்னாகையை கொண்டு
வந்தால் போதும்.

பணம் கோடி நீ கொண்டு வர வேண்டாம்
பண்பாடு நிறைய கொண்டு
வந்தால் போதும்.

வலம் வர வாகனங்கள் நீ கொண்டு
வர வேண்டாம்
வாழ்க்கை பாதையில் நாம் நடக்க
நல் வழிகளை கொண்டு
வந்தால் போதும்.

அழகு தேவதைஎன
நீ நடந்து வர வேண்டாம்
வருத்தத்தில் ஆறுதல் தரும்
இனியவளாய் வந்தால் போதும்..

காதலுக்கு மரியாதை


நடந்து சென்றேன்
பார்க்காமல் போனாள்.
சைக்கிளில் சென்றேன்
ஹாய் என்றாள்.
பைக்கில் சென்றேன்
அன்பே என்றாள்.
காரில் சென்றேன்
அத்தான் என்றாள்.
இவை அத்தனையும்
வாடகைக்கு என்றேன்
போடா என்றாள்.

மக்கட்தொகை


ஓடி விளையாடு பாப்பா!
இன்றே ஓடி விளையாடு!
நாளை
நகர கூட இடம் இருக்காது!
ஆதலால்
இன்றே! இப்போதே!
நடந்தாவது விளையாடு!

Friday, January 14, 2011

நம்பிக்கை வேர்கள்



நம்பிக்கை
நார்
மட்டும்
போதும்
உதிர்ந்த
பூக்கள்
ஒவ்வொன்றாய்
வந்து
ஒட்டி கொள்ளும்.

நிழலாய் வருவானா ?


நான் கருவில் இருக்கையில்
என் கனவில் வந்தவன்

நான் உலகில் பிறக்கையில்
என் உணர்வுடன் பிறந்தவன்

நான் சிரித்து வளர்கையில்
என் சிந்தையில் சிரித்தவன்

நான் கனவு காண்கையில்
என்னுடன் வாழ்ந்தவன்

என் நிஜ வாழ்வில்
நிழலாய் வருவானா ?

Sunday, January 9, 2011

வேண்டும் நீ


நினைவுகள் நீங்கிய போதும்
நிழலாய் என்னில்......

கவிதைகள் கலைந்த நிலையிலும்
கனவாய் என்னுள்....

சூலால்கள் மாறினும் சுழலும்
காற்றாய் என்னில்...

கருமணிகள் அயர்ந்த போதும்
கண்ணீராய் என்னில்...

கவலைகள் மறந்த நிலையில்
புண் சிரிப்பாய்  என்னுள்.....

சிட்டாய் நான் சிறகடிக்க
சிறகாய் என்னுள்...

என் மௌனங்கள் வடிவம் பெற
வார்த்தையாய் அணைக்கு...

என் வாழ்க்கை படகில்
படகோட்டியாய்  எனக்கு....
வேண்டும் நீ ................

இளைஞனின் இதய குரல்



அறிவு இல்லை என்பதால்
அன்பு இல்லை என்று நினைத்தாயடி

அழகு இல்லை என்பதால்
என்னை அடியோடு வெறுத்தாயடி

அற்ப்புத விளக்காய் நான் இருப்பேன்

நான் உன் புடவைக்கு விலை கேட்டு வரவில்லையடி
உன் புன்னகைக்கு விலை கேட்டு வந்தேன்.